காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை திமுக அரசு விட்டுக் கொடுக்காது - உதயநிதி ஸ்டாலின்

 
உதயநிதி ஸ்டாலின்

காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை திமுக அரசு விட்டு கொடுக்காது என தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். 
  
காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனையடுத்து காவிரி மேலாண்மை ஆணையத்தை நாடியது தமிழக அரசு. இந்த நிலையில், தமிழகத்திற்கு காவிரியில் இருந்து அக்டோபர் 15 வரை வினாடிக்கு 3,000 கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.  காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்த நிலையில் 3,000 கன அடி நீர் திறக்க மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இருப்பினும் கர்நாடக அரசு பிடிவாதம் பிடித்து வருகிறது. நேற்று நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டத்திலும் தமிழ்நாட்டுக்கு விநாடிக்கு 3000 கன அடி தண்ணீர் திறக்க பரிந்துரை செய்யப்பட்டது. இதனிடையே காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் இன்று டெல்லியில் கூடுகிறது.

காவேரி

இந்த நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக அமைச்சார் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், காவிரி விவகாரத்தில் சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அவை மேற்கொள்ளப்படும். துறை சார்ந்த அமைச்சர்கள் தகுந்த விளக்கம் அளித்துள்ளனர். எப்போதும் தமிழகத்தின் உரிமையை இந்த விவகாரத்தில் விட்டு கொடுக்கமாட்டோம் என கூறினார்.