பெரியார் சிலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை!

 
udhay

தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி சேலம் கோட்டை பகுதியில் அமைந்துள்ள பெரியார் திருவுருவச்சிலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

தந்தை பெரியார் ஈரோடு வெங்கடநாயக்கர் - சின்னத்தாயம்மாள் தம்பதியருக்கு 17.09.1879ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தார். சாதியப் பாகுபாட்டினைக் கண்டு வெகுண்டெழுந்து சமூக நீதி காத்திடத் தொடர்ந்து போராடியவர் தந்தை பெரியார் அவர்கள். மனிதனுக்கு மனிதன் ஏற்றத்தாழ்வு இல்லை, ஆணும் பெண்ணும் சரி நிகர் சமம் என்பதை அடிப்படைக் கொள்கையாகக் கொண்டு, சாதி ஒழிப்பு, பெண் அடிமைத்தனம் ஒழிப்பு ஆகியவற்றிற்காகத் தொடர்ந்து போராடினார். இன்று அவரது 145வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தலைவர்கள் மலரும் பெரியாருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர். 


இந்த நிலையில், தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி சேலம் கோட்டை பகுதியில் அமைந்துள்ள பெரியார் திருவுருவச்சிலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 145 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சேலம் கோட்டை பகுதியில் அமைந்துள்ள பெரியார் அவர்களின் திருவுருவச்சிலைக்கு இன்று மாலை அணிவித்து மரியாதை செய்தோம்.  மேலும், பெரியாரின் பிறந்த நாளையொட்டி சமூகநீதி நாள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டோம். மூட நம்பிக்கைகளை ஒழித்து மானுடம் காக்க பெரியார் வழியில் அயராது உழைப்போம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.