மாற்றத்திறனாளிகளின் தன்னம்பிக்கை பயணமும் - லட்சியமும் வெல்லட்டும் - உதயநிதி ஸ்டாலின்
மாற்றத்திறனாளிகளின் தன்னம்பிக்கைப் பயணமும் - லட்சியமும் வெல்லட்டும் என தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், மாற்றுத்திறன் கொண்ட சகோதர - சகோதரிகள் அனைவருக்கும் எனது உலக மாற்று திறனாளிகள் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்கிடும் விதமாக, ரூ.1500 என்றிருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை ரூ.2000 என உயர்த்தி வழங்க நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.
மாற்றுத்திறன் கொண்ட சகோதர - சகோதரிகள் அனைவருக்கும் எனது #WorldDifferentlyAbledDay வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
— Udhay (@Udhaystalin) December 3, 2023
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்கிடும் விதமாக, ரூ.1500 என்றிருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை ரூ.2000 என உயர்த்தி…
2021-ல் கழக அரசு அமைந்த பிறகு, 2ஆவது முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை உயர்த்தப்பட்டிருப்பது, மாற்றுத்திறனாளிகளின் ஏற்றத்துக்கும் - வளர்ச்சிக்கும் நம் திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும் என்பதற்கான சான்றாகும். மாற்றத்திறனாளிகளின் தன்னம்பிக்கைப் பயணமும் - லட்சியமும் வெல்லட்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.