பாசிச கூட்டத்தின் கூடாரத்தை இழுத்து மூடி, மாநில உரிமை மீட்போம் - உதயநிதி ஸ்டாலின்

 
Udhayanidhi

பாசிச கூட்டத்தின் கூடாரத்தை இழுத்து மூடி, மாநில உரிமை மீட்போம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தி.மு.கழக இளைஞர் அணியின் 2 ஆவது மாநில மாநாடு - மாநில உரிமை மீட்பு முழக்கமாக சேலத்தில் எதிர்வரும் 17-ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டில் - இந்திய ஒன்றியமே திரும்பி பார்க்கிற வகையில் நடைபெறவுள்ள, இந்த பெருமைக்குரிய மாநாட்டுக்கான அழைப்பிதழை கழகத்தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடமும் கழக பொதுச் செயலாளர் - மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களிடமும் இன்று வழங்கி வாழ்த்து பெற்றோம்.


திமுக இளைஞரணி மாநில மாநாட்டின் வெற்றிச் செய்தி - எட்டுத்திக்கும் எதிரொலிக்கும் வகையில் செயலாற்றுவோம். பாசிச கூட்டத்தின் கூடாரத்தை இழுத்து மூடி - மாநில உரிமை மீட்போம்! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.