விளையாட்டு துறையிலும் நம்பர் 1 என்ற இலக்கை எட்ட உறுதியுடன் செயலாற்றுவோம் - உதயநிதி

 
stalin

விளையாட்டு துறையிலும் நம்பர் 1 என்ற இலக்கை எட்ட கழக அரசு என்றும் உறுதியுடன் செயலாற்றும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், மிழ்நாடு இளைஞர் நலன் & விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் சாதனைகள் தொடர்ந்திடும் வகையில் அடுத்தடுத்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக ஆலோசனைகளை மேற்கொள்வதற்காக, நடைபெற்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிர்வாகக்குழுக் கூட்டத்தில் தலைமை செயலகத்தில் இன்று பங்கேற்றோம்.


அரசு தலைமைச் செயலாளர் – தமிழ்நாடு இளைஞர் நலன் & விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் – விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில், தமிழ்நாட்டில் தொடர்ந்து சர்வதேச & தேசிய அளவிலான போட்டிகளை நடத்துவது - ஒவ்வொரு பகுதியிலும், திறமையான வீரர்களை கண்டறிந்து ஊக்குவிப்பது – விளையாட்டுத்துறை கட்டமைப்புகளை மேம்படுத்துவது என தமிழ்நாட்டை விளையாட்டுத் துறையில் முதன்மை மாநிலம் ஆக்கிடும் வகையிலான கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன என குறிப்பிட்டுள்ளார்.