பாஜகவின் அணிகளாக விசாரணை அமைப்புகள் செயல்படுகின்றன - உதயநிதி ஸ்டாலின்

 
உதயநிதி ஸ்டாலின்

பாஜகவின் அணிகளாக வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகள் உள்ளன என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். 

அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை மட்டுமின்றி சென்னை உள்ளிட்ட 40 இடங்களிலும் சோதனை நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் வேலு மற்றும் அவருடைய மகன் கம்பன், குமரன் ஆகியோர் தொடர்புடைய இடங்களிலும் திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியிலும் காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் அமைச்சர் ஏ.வ.வேலுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

5 சுங்கச்சாவடிகளை அகற்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் வலியுறுத்தல்.. - எ.வெ.வேலு தகவல்..

இந்த நிலையில், பாஜகவின் அணிகளாக வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகள் உள்ளன என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது: மத்தியில் ஆளும் பாஜகவின் அணிகளாக வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகள் உள்ளன. திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளிடமும் நீட் விலக்கு கோரி கையெழுத்து பெற திட்டமிட்டுள்ளோம். விசாரணை அமைப்புகள் சோதனைகளை சட்டப்படி சந்திப்போம் என குறிப்பிட்டுள்ளார்.