புழல் ஏரியில் அமைச்சர்கள் துரைமுருகன், மூர்த்தி திடீர் ஆய்வு!

 
 Duraimurugan  Duraimurugan

புழல் ஏரி உடையும் நிலையில் உள்ளதாக செய்தி வெளியான நிலையில், தமிழக அரசு இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது.

புழல் ஏரியின் கரை உடையும் நிலையில் உள்ளதாக தகவல் வெளியானது. கனமழை வெள்ளத்தால் புழல் ஏரி நிரம்பி வழிகிறது. இதன் காரணமாக 
புழல் ஏரியின் கரை உடையும் நிலையில் உள்ளதாக தகவல் வெளியானது.  புழல் ஏரியின் சுற்றுச்சுவர் சரிந்து விழுந்துள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். புழல் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறி சாலைகள் சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனிடையே புழல் ஏரி பாதுகாப்பாக உள்ளது. மக்கள் பதற்றம் அடைய தேவையில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்தது. 

puzhal lake

இந்த நிலையில், புழல் ஏரியில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் சென்று பார்வையிட்டார். சென்னை புழல் ஏரியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் ஆய்வு  செய்தனர். புழல் ஏரி முழு கொள்ளளவை எட்டி கரைகளில் தண்ணீர் வழிந்தோடிய நிலையில் ஏரியின் உறுதித்தன்மை குறித்து அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.   ஏரிக்கு வினாடிக்கு 850 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், 100 கனஅடி உபரிநீர் திறப்பட்டு வருகிறது. சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.