அறநிலையத்துறை அலுவலக வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டடம்!

 
TN

இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலக வளாகத்தில் ரூ. 15 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.

சென்னை, நுங்கம்பாக்கம் அறநிலையத்துறை ஆணையர் அலுவலக வளாகத்தில் ரூ. 15 கோடி செலவில் கூடுதல் கட்டடம் கட்டப்படவுள்ளது. இதன் காரணமாக பூமி பூஜையுடன் கட்டுமான பணியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். புதிய கட்டடம் 39,913 சதுரடியில் 4 தளங்களுடன் அமையவுள்ளது; கோயிலின் புத்தக விற்பனை நிலையம், வரவேற்பறை கட்டப்பட உள்ளது. 

TN

 நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலக வளாகத்தில் 15 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்படும் என 2021- 222 ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் போது தமிழக அரசு தெரிவித்திருந்தது. அதன்படி இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து சென்னை, நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில், அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் ஆகிய 12 நபர்களுக்கும், 14 இதர பணியாளர்களுக்கும், கருணை அடிப்படையில் 6 நபர்களுக்கும், ஒரு மாற்றுத்திறனாளி நபருக்கும் பணிநியமன ஆணைகளை  முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். 

TN
இந்நிகழ்ச்சியில் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் ,சட்டமன்ற உறுப்பினர் எழிலன், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கௌமார மடாலயம் குமரகுருபர ஸ்வாமிகள் ,சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் மற்றும் பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.