மழை பாதிப்பு பெரிய அளவில் இல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். கனமழையால் பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களிடம் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர் அங்கு பணிகளை துரிதப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் பொழுது மாநில பேரிடர் மீட்பு பணிகள் துறை செயலாளர் அமுதா, மாநில பேரிடர் மீட்பு பணிகள் துறை ஆணையர் லக்கானி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தார்கள்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெரிய அளவில் மழை பெய்துள்ளது. ஏற்கனவே 2 நாட்களாக மாவட்ட ஆட்சியாளர்களோடு ஆய்வுக் கூட்டங்களை நடத்தி அதனை மேற்பார்வையிட இங்கிருந்து மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை அனுப்பி வைக்கப்பட்டு பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. பெரிய அளவில் பாதிப்பு இருந்ததாக தற்பொழுது வரை செய்தி இல்லை. எது வந்தாலும் சமாளிக்க இந்த அரசு தயாராக உள்ளது. தென்காசிக்கு கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஏற்கனவே சென்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து திருச்சியில் மழை பெய்ததால் அங்கு சென்றுள்ளார். தற்பொழுது மீண்டும் தென்காசிக்கு போக சொல்லி இருக்கிறோம். உபரிநீர் திறந்து விடுவதற்கு முன்பாக எச்சரிக்கை கொடுக்கப்படுகிறது. சில இடங்களில் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தேவைப்படும் இடங்களில் அந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 2000 ரூபாய் நிவாரண நிதி கொடுக்கும் பணிகள் ஏறத்தாழ முடிவடைந்துள்ளது” என்றார்.
ஒன்றிய அரசுக்கு வெள்ள நிவாரண நிதி கேட்டு அழுத்தம் கொடுக்கப்படுமா என்ற கேள்விக்கு, ஊடகத்தில் இருப்பவர்கள் தொடர்ந்து எழுதினால் அதுவே பெரிய அழுத்தமாக இருக்கும். ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதாக இருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு எப்படி போதுமானதாக இருக்கும்? எனக் கேள்வி எழுப்பினார். ஒரே நாடு ஒரே தேர்தல் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு, ஒன்று சேர்ந்து கடுமையாக எதிர்ப்போம், ஒரே நாடு ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம் தொடர்பாக கூட்டணி கட்சிகளோடு இணைந்து போராட்டம் நடத்தப்படுமா என்ற கேள்விக்கு கேள்விக்கு பார்ப்போம் எனக் கூறினார்.


