SIR நடவடிக்கையை எதிர்ப்பது ஏன்? - அனைத்துக்கட்சி கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் விளக்கம்

 
s s

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க திமுக தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்தில் 40க்கும் மேற்பட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன.

கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நேர்மையான தேர்தல் நடத்த உண்மையான வாக்காளர் பட்டியல் அவசியம் என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் அதற்கு உரிய கால அவகாசத்தை கொடுக்க வேண்டும். அதைவிடுத்து தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு முழுமையான திருத்த பணிகளை செய்ய நினைப்பது உண்மையான வாக்காளர்களை நீக்கும் தந்திரம் மட்டுமே. மக்கள் வாக்குரிமையை பறிக்கும் விதமாகவும் அவர்களை அச்சுறுத்தும் விதமாகவும் பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்றது. அதுபோல தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும் நடைபெறவுள்ளது. இதற்கு எதிராக தமிழ்நாடு தனது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டியது முக்கிய தேவையாக உள்ளது” என்றார்.