அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழை

 
rain

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ஏழு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain

இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக தென்காசி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

rain

இந்நிலையில்  தமிழ்நாட்டில் மதியம் ஒரு மணி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு, ராமநாதபுரம், கன்னியாகுமரி ,நெல்லை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.