நாளை முதல் மார்ச் 1 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்..

 
நாளை முதல் மார்ச் 1 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்..


தமிழகத்தில் நாளை ( பிப்.27) முதல் 1-ந் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் , தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் (26-02-2023) இன்று பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்து நாளை ( 27-02-2023) முதல் மார்ச் 1ம் தேதி (01-03-2023) வரை தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவடங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

வானிலை மையம் தகவல்..

மேலும், மார்ச் 2ம் தேதி ( 02.03.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட  வானிலை நிலவக்கூடும் என்றும்,   சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும் என்றும் கூறியுள்ள வானிலை ஆய்வு மையம்,  மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என்று குறிப்பிட்டுள்ளது.