கிளாம்பக்கத்திலிருந்து கூடுதல் பேருந்துகள்.. அவசர ஆலோசனை மேற்கொண்ட அமைச்சர் சிவசங்கர்..

 
Sivasankar Sivasankar

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து கூடுதல் பேருந்துகளை இயக்குவது தொடர்பாக அனைத்து போக்குவரத்து கழகம் மேலாண் இயக்குனர்களுடன் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை மேற்கொண்டார். 

சென்னை நகருக்குள் எற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கோயம்பேடு பேருந்து நிலையம், கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டது.  இதனால் ஆரம்பத்தில் பெரும் சிரமங்களை சந்தித்த பொதுமக்கள் தற்போது மெல்ல மெல்ல புதிய பேருந்து நிலையத்திற்கு பழகிவிட்டனர். கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து  மட்டும் தென் மாவட்டங்களுக்கு  பேருந்துகள் இயக்கப்படும் போதே , பண்டிகைக் காலங்களில் பேருந்துகள் பற்றாக்குறை ஏற்படும். ஆனால் தற்போது கிளாம்பாக்கம், மாதவரம், தாம்பரம் என பிரித்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால்  சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் போதிய அளவில் இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  

கிளாம்பக்கத்திலிருந்து கூடுதல் பேருந்துகள்.. அவசர ஆலோசனை மேற்கொண்ட அமைச்சர் சிவசங்கர்.. 

அத்துடன் பேருந்துகள் இல்லாததால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.  இரவு நேரங்களில் போதுமான அளவு பேருந்துகள் இயக்கப்படுவது இல்லை எனவும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இது குறித்து பதிவு வெளியிட்டிருந்த நிலையில், போக்குவரத்துத் துறை  அமைச்சர் சிவசங்கர் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில்,  கிளாம்பாக்கத்தில் நடந்த சம்பவம் என்ன?  எவ்வளவு பேருந்துகள் தினசரி இயக்கப்படுகிறது?  இரவு நேரங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் எண்ணிக்கைகள் தொடர்பாகவும்,  கூடுதல் பேருந்துகளை இயக்க  மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது