வழக்கத்தை விட அதிகமாக கொட்டி தீர்த்த கோடை மழை
தமிழ்நாட்டில் கோடை மழை மார்ச் 1 முதல் இன்று காலை வரை 115% கூடுதலாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பொதுவாக 81 மில்லி லிட்டர் அளவு இயல்பாக மழை பதிவாகும் நிலையில் இந்த ஆண்டு 124.1 மில்லி மீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் சூரளக்கோடு பகுதியில் 8 சென்டிமீட்டர், பெருஞ்சாணி அணையில் 6 சென்டிமீட்டர் மழையும், புத்தன் அணையில் 6சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வறட்டு பள்ளம் ,தேனி மாவட்டம் தேக்கடி, விருதுநகர், தென்காசி மாவட்டம் அடவிநயனார் கோயில் அணை ஆகியவற்றில் தலா 5 சென்டிமீட்டரும், ஸ்ரீவில்லிபுத்தூர் , திருநெல்வேலி களக்காடு, நீலகிரி மாவட்டம் கூடலூர், குமரி மாவட்டம் பாலமோர் ஆகிய இடங்களில் தலா 4 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
குறைந்தபட்சமாக ராஜபாளையம், தாராபுரம், திருநெல்வேலி ஒட்டன்சத்திரம், பொன்னமராவதி, முக்கடல் அணை, எடப்பாடி, மஞ்சளாறு, நாகர்கோவில், அம்மாபேட்டை ,நத்தம், நடுவட்டம், பென்னாகரம் ,நாங்குநேரி ஆகிய பகுதிகளில் 2 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.