2 பச்சிளம் குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தாய்.. சேலத்தில் சோகம்..

 
தற்கொலை

 சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் அருகே குறை பிரசவத்தில் பிறந்த இரு பச்சிளம் குழந்தைகளுடன் கிணற்றில் குறித்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே உள்ள பாலபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சபரி. இவரது மனைவி சரளா. இந்த தம்பதிக்கு சர்வேஷ் என்கிற 7 வயது மகன் இருக்கிறார். இந்நிலையில்  சரளா மீண்டும்   கர்ப்பமாக இருந்துள்ளார்.  கடந்த மாதம் பேர் காலத்திற்காக தனது தாய் வீட்டிற்கு சென்ற அவருக்கு,  ஒரு மாதம் முன்பாகவே குறை பிரசவத்தில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. இரண்டு குழந்தைகளும் குறைவான எடையுடன் இருந்ததால்,   சரளா மன உளைச்சரில் இருந்ததாக கூறப்படுகிறது.   குழந்தைகளின் நிலையை பார்க்கும் போது இறந்துவிடலாம் என தோன்றுவதாக அடிக்கடி சரளா  வேதனையுடன் கூறி வந்திருக்கிறார்.

குழந்தை உயிரிழப்பு

 உறைனர்கள் அவருக்கு ஆறுதல் சொல்லி வந்துள்ளனர்.  இதனையடுத்து அவரது  கணவர் சபரி நேற்றிரவு தனது மாமனார் வீட்டிற்கு வந்து சரளாவுக்கு   ஆறுதல் கூறியிருக்கிறார். பின்னர்  சபரி அங்கு இருந்து சென்ற பிறகு அதிகாலை நேரத்தில் சரளாவும்,  குழந்தைகளும்  படுக்கையில்  இல்லாததை பெற்றோர் கவனித்துள்ளனர்.  பின்னர் அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தபோது,  அருகில் உள்ள வெங்கடேஷ் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் சரளா  கிடந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.  அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

கிணற்றில் விழுந்து தற்கொலை

இது குறித்த தகவலின்பேரில்  நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர்,   சரளாவுடன் இருந்த இரண்டு பச்சிளம் குழந்தைகளையும்   தேடி வருகின்றனர்.  இந்த சம்பவம் குறித்து கொங்கணாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து,  தீவிர விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு பச்சிளம் குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.