மகன் தற்கொலை செய்து கொண்டதால், அதிர்ச்சியில் தாய் மயங்கி விழுந்து பலி!

 
de

சேலத்தில் மகன் தற்கொலை செய்து கொண்டதால் அதிர்ச்சியில் தாய் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் கோட்டை பகுதியை சேர்ந்தவர் முகமதுபாஷா. இவர் சொந்தமாக அச்சகம் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி நூர்ஜகான். இவர்களது மகன் நிஜாமுதீன் (33). எம்.எஸ்சி வரை படித்துள்ள இவர், வேலை கிடைக்காததால் தந்தைக்கு உதவியாக அச்சகத்தை கவனித்து வந்துள்ளார். மேலும், நிஜாமுதீன் வேலை கிடைக்காததாலும், திருமணம் நடக்காததாலும் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார்.

salem

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, அவர் தனது அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் நிஜாமுதீன்  வெளியே வராததால் பெற்றோர் சென்று பார்த்துள்ளனர். அப்போது, நிஜாமுதீன் தூக்கில் சடலமாக தொங்கினார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தாய் நூர்ஜகான் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை குடும்பத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நூர்ஜகான் மாரைடப்பால் உயிரிழந்ததாக தெரிவித்தனர். தகவலின் பேரில் சேலம் டவுன் போலீசார், நிஜாமுதின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகன் இறந்த அதிர்ச்சியில், தாய் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.