மகனை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட தாய்

 
suicide suicide

ஓசூர் அருகே 9 வயது மகனை கொலை செய்து விட்டு தாய் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்.

suicide

ஓசூரை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ட்ரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவிக்கு 38 வயதாகிறது. இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகனும் 17 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். 38 வயதான அந்த பெண்ணுக்கும் அவரது 9 வயதான அவரது மகனுக்கும் தொடர்ந்து  உடல்நிலை சரியில்லாமல்  இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண் கடந்த சில நாட்களாகவே மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இன்று அதிகாலை வீட்டில் உள்ள படுக்கை அறையில் அந்த பெண் தலையணையை அழுத்தி தனது மகனை கொலை செய்து விட்டு அவரும் வீட்டில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது

இதுகுறித்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் அப்பகுதிக்கு சென்று இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.