"பாலியல் தொல்லையால் கோவையில் பள்ளி மாணவி தற்கொலை" - கனிமொழி , கமல் ஹாசன் கண்டனம்!!
பாலியல் தொல்லை பற்றி பல முறை கூறியும் நடவடிக்கை எடுக்காத பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி வலியுறுத்தியுள்ளார்.
கோவை கோட்டைமேடு பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் , ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் வீட்டில் தனியாக இருந்தபோது மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், மாணவியின் சடலத்தை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர். அத்துடன் மாணவியின் கடிதம் ஒன்றும் போலீசாரிடம் சிக்கியது. அதில் ''யாரையும் சும்மாவிடக் கூடாது. ரீத்தாவோட தாத்தா, எலிசா சாருவோட அப்பா, இந்த சார் யாரையும் விடக் கூடாது" என்று எழுதியிருந்தார். இதுகுறித்த விசாரணையில் மாணவிக்கு தொடர்ந்து பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், அதன் காரணமாகவே மாணவி தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆசிரியர் கொடுத்த, பாலியல் தொல்லைக் காரணமாகக் கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவி தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் பதறவைக்கிறது. தனக்கு நேர்ந்த தொடர் பாலியல் தொல்லை பற்றி பலமுறை சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத பள்ளி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும். மாணவர்களின் குரலுக்குச் செவி கொடுத்திருந்தால், குற்றம் நிகழ்வதைத் தக்க நேரத்தில் தடுத்திருக்க முடியும்" என்று பதிவிட்டுள்ளார்.
nullஆசிரியர் கொடுத்த, பாலியல் தொல்லைக் காரணமாகக் கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவி தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் பதறவைக்கிறது. தனக்கு நேர்ந்த தொடர் பாலியல் தொல்லை பற்றி பலமுறை சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத பள்ளி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும். (1/2)
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) November 13, 2021
அதேபோல் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் , ''பாலியல் தொல்லையால் கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. அவரது மரணத்திற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும். வேலியே பயிரை மேயும் அவலத்திற்குத் தமிழகம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்'' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பாலியல் தொல்லையால் கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. அவரது மரணத்திற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும். வேலியே பயிரை மேயும் அவலத்திற்குத் தமிழகம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.
— Kamal Haasan (@ikamalhaasan) November 12, 2021