வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உடல் தகனம்!

 
MS Swaminathan

30 குண்டுகள் முழுங்க வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உடல் பெசன்ட்நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இந்தியாவின் பசுமை புரட்சியின் தந்தை வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கடந்த 28ம் தேதி காலமானார். அவருக்கு வயது 98.  எம்.எஸ் சுவாமிநாதன் என்று அழைக்கப்படும் மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் கும்பகோணத்தில் பிறந்தவர்.  பள்ளிப்படிப்பு முடித்த பின்னர், திருவாங்கூர் பல்கலைக்கழகத்தில் இளநிலை அறிவியல் பட்டத்தையும், கோவை வேளாண் பள்ளியில் (தற்போது வேளாண் பல்கலைக்கழகம்) இளநிலை வேளாண்மை பட்டத்தையும் பெற்றார். பல்வேறு ஆய்வு நிறுவனங்களில் பணியாற்றிய பிறகு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 

TN

இவர் இந்தியாவின் பசுமைப் புரட்சியை முன்னின்று நடத்தியவர். இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் புகழ்பெற்ற ஆய்வு நிலையங்களில் பேராசிரியர், ஆராயச்சி நிர்வாகி, தலைவராக இருந்தவர். வேளாண்மைத்துறைச் செயலாளர், நடுவண் திட்டக் குழுவின் உறுப்பினர், மற்றும் துணைத்தலைவர் பதவிகளை வகித்தவர்.  அத்துடன்  தேசிய, சர்வதேச அளவில் 41 விருதுகளை பெற்றுள்ளார். இந்நிலையில் பசுமைப் புரட்சியின் தந்தை என அறியப்பட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கடந்த 28ம் தேதி காலை உயிரிழந்தார்.  மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலி, ஆளுநர் ஆர்.என்.ரவி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில், 30 குண்டுகள் முழுங்க வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உடல் பெசன்ட்நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.