#BREAKING "முலாயம் சிங் மறைவு வருத்தம் அளிக்கிறது" - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
உபி-ன் முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்
உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ்(82) காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவர் முலாயம் சிங் யாதவ் 3 முறை உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சராக இருந்தவர். ஆசிரியரியரான முலாயம் சிங் யாதவ் ஓர் மல்யுத்த வீரரும் கூட. படிப்படியாக அரசியலில் முன்னேற்றம் கண்டு முக்கியமான தலைவராக உருவெடுத்தார். அவரது மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Saddened by the demise of former CM of UP and senior leader of @samajwadiparty Thiru. Mulayam Singh.
— M.K.Stalin (@mkstalin) October 10, 2022
One of the tallest figures in Indian Politics who stood for reservation for the OBC, Thiru Mulayam Singh was deeply committed to secular ideals. His death is an irreparable loss.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "உபி-ன் முன்னாள் முதலமைச்சரும், மூத்த தலைவருமான முலாயம் சிங் யாதவ் மறைவு வருத்தம் அளிக்கிறது; மதச்சார்பற்ற கொள்கைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார் முலாயம் சிங். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு. என் சகோதரர் அகிலேஷ் யாத்விற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திமுக சார்பில், கட்சியின் பொருளாளரும், திமுக நாடாளுமன்றக் கட்சித் தலைவருமான டி.ஆர். பாலு முலாயம் சிங் யாத்விற்கு இறுதி மரியாதை செலுத்துவார்." என்று குறிப்பிட்டுள்ளார்.