முரசொலி மாறனின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் மரியாதை!!
முரசொலி மாறனின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
முரசொலி மாறனின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை, சிலைமான் பகுதியில் முரசொலி மாறனின் திருவுருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மதுரையில் இருந்து ராமநாதபுரம் செல்லும் வழியில் அண்ணா மன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "நாளெல்லாம் நம்மை இயக்கிடும் நூற்றாண்டு நாயகர் தலைவர் கலைஞரின் மனச்சாட்சியென வாழ்ந்திட்ட முரசொலி மாறன் அவர்களது 90-ஆவது பிறந்தநாள் இன்று!
நாளெல்லாம் நம்மை இயக்கிடும் நூற்றாண்டு நாயகர் தலைவர் கலைஞரின் மனச்சாட்சியென வாழ்ந்திட்ட முரசொலி மாறன் அவர்களது 90-ஆவது பிறந்தநாள் இன்று!
— M.K.Stalin (@mkstalin) August 17, 2023
மதுரை சிலைமானில் தலைவர் கலைஞர் அவர்களால் 1952-இல் திறந்து வைக்கப்பட்ட கழக அலுவலகத்தில், மரியாதைக்குரிய முரசொலி மாறன் அவர்களது திருவுருவப்… pic.twitter.com/bEcXZaLoVW
நாளெல்லாம் நம்மை இயக்கிடும் நூற்றாண்டு நாயகர் தலைவர் கலைஞரின் மனச்சாட்சியென வாழ்ந்திட்ட முரசொலி மாறன் அவர்களது 90-ஆவது பிறந்தநாள் இன்று!
— M.K.Stalin (@mkstalin) August 17, 2023
மதுரை சிலைமானில் தலைவர் கலைஞர் அவர்களால் 1952-இல் திறந்து வைக்கப்பட்ட கழக அலுவலகத்தில், மரியாதைக்குரிய முரசொலி மாறன் அவர்களது திருவுருவப்… pic.twitter.com/bEcXZaLoVW
மதுரை சிலைமானில் தலைவர் கலைஞர் அவர்களால் 1952-இல் திறந்து வைக்கப்பட்ட கழக அலுவலகத்தில், மரியாதைக்குரிய முரசொலி மாறன் அவர்களது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.
கொள்கைக் கருவூலமான முரசொலி மாறன் அவர்கள் எழுதிய மாநில சுயாட்சி நூல் அனைவரும் படித்திட வேண்டிய ஒன்று!
முரசொலி மாறன் அவர்களது புகழ் போற்றுவோம்! அவரது கருத்துகளை இளைய சமுதாயத்துக்குப் பயிற்றுவிப்போம்! " என்று பதிவிட்டுள்ளார்.