கலைஞரின் மனசாட்சி முரசொலி மாறன் அவர்களின் 90வது பிறந்தநாள் - திமுக வெளியிட்ட அறிவிப்பு

 
tn

முரசொலி மாறன் திருவுருவச் சிலைக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நாளை மரியாதை செலுத்துகிறார்.

tn

இதுகுறித்து திமுக சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முத்தமிழறிஞர் கலைஞரின் மனச்சாட்சியாக விளங்கியவரும் - திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூளையாக செயல்பட்டவரும் – மத்திய அமைச்சராக இருந்து அனைவருடைய பாராட்டுதல்களையும் பெற்று மிகச் சிறப்பாக பணியாற்றியவருமாகிய முரசொலி மாறன் அவர்களின் 90வது பிறந்த நாளினை முன்னிட்டு 17.8.2023 வியாழன் கிழமை காலை 8.00 மணியளவில் கோடம்பாக்கம், ‘முரசொலி’அலுவலகத்தில் அமைந்துள்ள முரசொலி மாறன் திருவுருவச் சிலைக்கு கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் மற்றும் அமைச்சர் பெருமக்கள் மலர்மாலை அணிவிக்கின்றனர்.

duraimurugan

அதுபோது முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், பகுதிக் கழகச் செயலாளர்கள், தலைமைச் செயற்குழு – பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பகுதிக் கழக நிர்வாகிகள், வட்டக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகப் பிரதிநிதிகள், வட்டக் கழக நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள், இளைஞர் அணி, மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி, மாணவர் அணி, தொண்டர் அணி, தொழிலாளர் அணி, விவசாய அணி, விவசாயத் தொழிலாளர் அணி, ஆதிதிராவிடர் நலக்குழு, மீனவர் அணி, கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை, இலக்கிய அணி, வழக்கறிஞர் அணி, நெசவாளர் அணி, பொறியாளர் அணி, மருத்துவ அணி, சிறுபான்மையினர் நலஉரிமைப் பிரிவு, வர்த்தகர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி, சுற்றுச்சூழல் அணி, அயலக அணி, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி ஆகிய அனைத்து அணிகளின் மாநில நிர்வாகிகள், மாவட்ட அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள்- நிர்வாகிகள், சார்பு மன்றம், படிப்பகங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் அனைவரும் தவறாமல் கல கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்." என்று குறிப்பிட்டுள்ளார்.