செங்கல்பட்டு நீதிமன்றம் அருகே பெட்ரோல் குண்டு வீசி ஒருவரை கொல்ல முயற்சி!

 
Chengalpattu Chengalpattu

செங்கல்பட்டு நீதிமன்றம் அருகே வழக்கு விசாரணைக்காக ஆஜராக வந்த இளைஞர் ஒருவரை 5 பேர் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு அருகே 100 மீட்டர் தொலையில் லோகேஷ் என்ற நபர் வழக்கு விசாரணை ஒன்றில் ஆஜராவதற்காக நீதிமன்றத்திற்கு வந்துகொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த 5 பேர் கொண்ட கும்பல் திடீரென அவரை தாக்கத் தொடங்கியது. அவர்கள் கொண்டு வந்திருந்த நாட்டு வெடிகுண்டை விக்னேஷ் மீது வீசி கொலை செய்ய முயன்றனர். நாட்டு வெடிகுண்டு வீசியதில் விக்னேஷ் படுகாயம் அடைந்த நிலையில், அவர் உயிர் பிழைத்துவிட கூடாது என்பதற்காக அந்த கும்பல் அரிவாளை வைத்தும் விக்னேஷை வெட்டியுள்ளது. நீதிமன்றத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில், அந்த 5 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த விக்னேஷை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கு விசாரணைக்காக ஆஜராக வந்த இளைஞர் ஒருவரை 5 பேர் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.