கணவர் ஆவண படுகொலை; மனைவி தற்கொலை - சிக்கிய பரபரப்பு கடிதம்!!

 
tn

சென்னை பள்ளிக்கரணை அம்பேத்கர் தெருவை சேர்ந்த பிரவீன் ஜல்லடியன்பேட்டை சாய் கணேஷ் நகரை சேர்ந்த ஷர்மி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.  இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டார்  காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  இதனால் வீட்டின் எதிர்ப்பை மீறி  கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு காதலர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.  

tn

வீட்டை விட்டு வெளியேறிய ஷர்மியை பிரவீன் தனது குடும்பத்தினரின் ஆதரவுடன் திருமணம் செய்து கொண்டு, தனி குடித்தனம் நடத்தி வந்தார். இந்த சூழலில்  ஷர்மியின் அண்ணன் தினேஷ் தனது  நண்பர்களுடன் சேர்ந்து பிரவினை கொலை செய்தனர்.  இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

suicide

இந்நிலையில் சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞர் பிரவீன் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது மனைவி  தற்கொலை செய்து கொண்டார். பிரவீனின் மனைவி ஷர்மிளா தற்கொலைக்கு முன்பாக எழுதிய கடிதம்  பறிமுதல் செய்யப்பட்டது.  தன் மரணத்திற்கு தன்னுடைய பெற்றோர், அண்ணன்களே காரணம் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் ஷர்மிளா. தன் கணவன் இல்லாத இந்த உலகத்தில் இனி இருக்கப்போதில்லை என உருக்கமாக அவர் குறிப்பிட்டுள்ளார்.