நடிகர் சிவகார்த்திகேயன் எனக்கு மிகப்பெரிய துரோகம் பன்னிட்டார் - டி.இமான் பரபரப்பு குற்றச்சாட்டு

 
imman and siva

நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் பன்னிவிட்டதாக பிரபல இசையமைப்பாளர் டி.இமான் கூறியுள்ள குற்றச்சாட்டு திரையுலகிம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் சிவகார்திகேயன். இவரது நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா உள்ளிட்ட படங்களுக்கு பிரபல இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்து இருந்தார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த பெரும்பாலான பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகின. சீமராஜா திடைப்படத்திற்கு பின்னர் டி.இமான் சிவகார்த்திகேயன் திரைப்படங்களுக்கு இசையமைக்கவில்லை. 


இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் பன்னிவிட்டதாக பிரபல இசையமைப்பாளர் டி.இமான் கூறியுள்ள குற்றச்சாட்டு திரையுலகிம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள இசையமைப்பாளர் டி.இமான், நடிகர் சிவகார்த்திகேயன் துரோகம் செய்துவிட்டார். அவர் எனக்கு பன்னியது மிகப்பெரிய துரோகம். இனிமேல் இந்த ஜென்மத்திலும் அவருடன் இணைந்து பணியாற்ற மாட்டேன். ஒருவேளை அடுத்த ஜென்மத்தில் நான் இசையமைப்பாளராகவும், அவர் நடிகராகவும் பிறந்தால் அது நடக்கலாம். அவருடைய துரோகத்தை நான் தாமதமாகத்தான் புரிந்துகொண்டேன். இதுகுறித்து அவரிடம் கேட்டும்விட்டேன். ஆனால் அவர் கூறிய பதிலை என்னால் சொல்ல முடியாது. இவ்வாறு கூறியுள்ளார்.