"மாநகராட்சிப் பொறியாளரைத் தாக்கிய எம்எல்ஏ மீது நடவடிக்கை வேண்டும்" - அன்புமணி வலியுறுத்தல்!!

 
pmk

மாநகராட்சிப் பொறியாளரைத் தாக்கிய சட்டப்பேரவை உறுப்பினர் மீது நடவடிக்கை வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

tn

சென்னை மாநகராட்சி பொறியாளரை தாக்கியதாக திமுக எம்எல்ஏ கே.பி.சங்கர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சென்னையில் சாலை அமைக்கும் பணியை ஒப்பந்ததாரர்கள் உடன் தகராறு செய்து அதை நிறுத்தி நிலையில்.  அங்கு ஆய்வு செய்ய வந்த மாநகராட்சி பறக்கும்படை பொறியாளரை திருவொற்றியூர் திமுக எம்.எல்.ஏ கே பி சங்கர் மற்றும் அவரது உதவியாளர்கள் அடித்து உதைத்த புகார் எழுந்தது.  இதனடிப்படையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாகவும்,  கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயலில் ஈடுபட்டதாகவும் கூறி,  திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ கே.பி.சங்கரை கட்சியின் பொறுப்பிலிருந்து விடுவித்து உள்ளார்.

anbumani
இந்நிலையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், "சென்னை திருவொற்றியூரில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சிப் பொறியாளரை திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.சங்கரும், அவரது ஆதரவாளர்களும் தாக்கியுள்ளனர். 13 லாரிகளில் வந்த தார்-ஜல்லிக் கலவையையும் திருப்பி அனுப்பியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது! சென்னை மாநகராட்சி பொறியாளர் உள்ளிட்ட பணியாளர்களை தாக்கியதும்,  சாலை அமைக்கும் கருவிகளை சூறையாடியதும்  ஏற்றுக்கொள்ள முடியாத செயல்கள். ஒரு மக்கள் பிரதிநிதியே இத்தகைய செயல்களில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது. இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்க மாநகராட்சி தயங்குவது ஏன்? தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடப்பதை  தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இதேபோன்ற செயல்கள் தமிழகம் முழுவதும் அதிகரித்து விடும். உடனடியாக மாநகராட்சியிடம் புகார் பெற்று  திமுக சட்டமன்ற உறுப்பினர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! " என்று பதிவிட்டுள்ளார்.