மயில்சாமி இறப்பு திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு - விஜயகாந்த் உருக்கம்..

 
விஜயகாந்த்

மயில்சாமி  இறப்பு திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என நடிகரும், தேமுதிக  தலைவருமான  விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் மன வேதனையும் அடைந்தேன். சின்னக்கவுண்டர், தவசி உள்ளிட்ட படங்களில் என்னுடன் நடித்துள்ளார்.  நகைச்சுவை மட்டுமல்லாது  குணச்சித்திர  வேடங்களிலும் நடித்து அசத்தியுள்ளார்.  நடிகர் மயில்சாமி சிறந்த மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட்டும் கூட. ஏராளமான மேடைகளில் தனது மிமிக்கிரிகளால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

மயில்சாமி இறப்பு திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு - விஜயகாந்த் உருக்கம்..

நடிகராக மட்டுமின்றி நெருங்கிய குடும்ப நண்பராகவும் திகழ்ந்தவர். என் மீது அதிகம் பாசம் கொண்டவர்.பழகுவதற்கு இனிமையானவர்,அனைவருக்கும் உதவும் குணம் கொண்டவர். இறைவன் சிவன் மீது அதிக பற்று கொண்ட மயில்சாமி சிவராத்திரி அன்று உயிரிழந்துள்ளார்.  அவரது இழப்பு திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாது இழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும், திரை உலகினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். ” என்று குறிப்பிட்டுள்ளார்.