தளர்வின்றி இன்றுவரை போராடிக்கொண்டிருக்கும் ஒப்பற்றப் போராளி - சீமான்

 
tn

தளர்வின்றி இன்றுவரை போராடிக்கொண்டிருக்கும் ஒப்பற்றப் போராளி நல்லகண்ணு என்று சீமான் புகழாரம் சூட்டியுள்ளார்.

Nallakannu

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது சமூகவலைத்தள பக்கத்தில், அடிமை இந்தியாவின் விடுதலைக்காக 7 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தப் பெருந்தியாகி;  விடுதலைபெற்ற இந்தியாவிலும் மணல்கொள்ளைக்கெதிராகவும், மண்ணின் உரிமைகளுக்காகவும் சமரசமற்று, தளர்வின்றி இன்றுவரை போராடிக்கொண்டிருக்கும் ஒப்பற்றப் போராளி!


நேர்மையையும், தூய்மையையும், வாய்மையையும் உயிரெனப் போற்றி அதனை அடியொற்றி வாழும் அப்பழுக்கற்றப் பெருந்தலைவர் எங்கள் ஐயா நல்லக்கண்ணு அவர்களது 99வது அகவை நாள் இன்று (26-12-2023)

ஐயாவுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமிதமும், பெருமகிழ்ச்சியும் அடைகிறேன்.என்று குறிப்பிட்டுள்ளார்.