தன்னுடைய ஊழல் குடும்பத்தையும் பாதிக்கும் என்பதை அரசியல்வாதிகள் அறிந்து கொள்ள வேண்டும் - நாராயணன் திருப்பதி

 
narayanan thirupathy

தான் செய்கின்ற ஊழல் தன்னை மட்டுமல்ல,  தன் குடும்பத்தையும் பாதிக்கும் என்பதை பொன்முடி மற்றும் அவரின் மனைவிக்கு எதிரான இன்றைய தீர்ப்பின் மூலம்  அரசியல்வாதிகள் அறிந்து கொள்ள வேண்டும் என தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி குறிப்பிட்டுள்ளார். 

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடந்த 1996 முதல் 2002 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ₹50 லட்சம் அபராதம் விதித்து  சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில்  தமிழ்நாடு அமைச்சர் பொன்முடி குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளி என அறிவிக்கப்பட்ட போது சட்டமன்ற உறுப்பினர் பதவியும் அவர் இழந்த நிலையில் இன்றைய தினம் அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்கிறார். சொத்துக் குறிப்பு வழக்கில் தமிழ்நாடு அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவர் மேல் முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்கு சிறை தண்டனை மட்டும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொன்முடி உச்ச நீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த நிலையில், தான் செய்கின்ற ஊழல் தன்னை மட்டுமல்ல,  தன் குடும்பத்தையும் பாதிக்கும் என்பதை அரசியல்வாதிகள் அறிந்து கொள்ள வேண்டும் என தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், தான் செய்கின்ற ஊழல் தன்னை மட்டுமல்ல,  தன் குடும்பத்தையும் பாதிக்கும் என்பதை பொன்முடி மற்றும் அவரின் மனைவிக்கு  எதிரான இன்றைய தீர்ப்பின் மூலம்  அரசியல்வாதிகள் அறிந்து கொள்ள வேண்டும். அவர் செய்த தவறினால் சட்ட ரீதியாக அவர் மனைவியும் தண்டிக்கப்பட்டுள்ளது அரசியல்வாதிகளுக்கும், அரசியல்வாதிகளின் குடும்பங்களுக்கும் ஒரு படிப்பினையை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.