மருத்துவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டியது அரசின் பொறுப்பு - ராமதாஸ் ட்வீட்
மருத்துவர்களை மதிக்க வேண்டியதும், மகிழ்ச்சிப்படுத்த வேண்டியதும் அரசின் பொறுப்பு என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "மக்களைக் காக்கும் கடவுள்கள் மருத்துவர்கள்; அவர்களை மதிக்க வேண்டியதும், மகிழ்ச்சிப்படுத்த வேண்டியதும் மக்களின் கடமை, அரசின் பொறுப்பு!
மக்களைக் காக்கும் கடவுள்கள் மருத்துவர்கள்; அவர்களை மதிக்க வேண்டியதும், மகிழ்ச்சிப்படுத்த வேண்டியதும் மக்களின் கடமை, அரசின் பொறுப்பு!
— Dr S RAMADOSS (@drramadoss) July 1, 2023
அன்னையும், தந்தையும் படைக்கும் கடவுள்கள் என்றால், மருத்துவர்கள் தான் மக்களைக் காக்கும் கடவுள்கள் ஆவர். அவர்கள் இல்லாமல் மனித உடலில் ஓர் அணுவும்…
அன்னையும், தந்தையும் படைக்கும் கடவுள்கள் என்றால், மருத்துவர்கள் தான் மக்களைக் காக்கும் கடவுள்கள் ஆவர். அவர்கள் இல்லாமல் மனித உடலில் ஓர் அணுவும் அசையாது. மக்களைக் காக்கும் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் மருத்துவர்களையும், அவர்களின் உணர்வுகளையும் மக்கள் மதிக்க வேண்டும். அவர்கள் மகிழ்ச்சியாக பணி செய்வதை உறுதிப் படுத்த அவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். தேசிய மருத்துவர்கள் நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், சமூகப் பொறுப்புடன் மக்களின் நோய் தீர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.