'நீரதிகாரம்' நாவல் - நடிகர் சூர்யா வாழ்த்து

 
TN

முல்லைப் பெரியாறு அணை. பென்னிகுக் எனும் பெரும் மனிதம் கொண்ட மாமனிதனின் விடா முயற்சியாலும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் கடும் உழைப்பாலும் உருவான முல்லைப் பெரியாறு அணை கட்டுமானம், சாதாரணமாக நிகழ்ந்துவிட்ட ஒன்றல்ல என்பதை எழுத்தாளர் அ.வெண்ணிலா ஆனந்த விகடனில் 122 வாரங்கள் எழுதினார். தற்போது நீரதிகாரம் நாவலாக வெளியாகியுள்ளது.  இதுத்தொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 'நீரதிகாரம்' நாவலுக்காக அ.வெண்ணிலா செலுத்தியிருக்கும் உழைப்பு பிரமிக்கவைக்கிறது.


மேற்கு தொடர்ச்சி மலையில் பெரியாறு உற்பத்தியாகும் இடத்தில் இருந்து, அரபிக் கடலில் சென்று சேரும் இடம் வரை; கம்பம் பள்ளத்தாக்கின் செழிப்பிற்கு காரணமாக இருக்கும் முல்லைப் பெரியாறு அணைக்கட்டு முதல், அணைக்கட்டை நிர்மாணித்த பென்னி குவிக்-ன் லண்டன் மாநகர் வரை களப்பயணம் செய்து சங்கத் தமிழ் தழைத்த மதுரை வரலாற்றுடன் இணைந்த முல்லைப் பெரியாறு அணையின் 130 ஆண்டு பயணத்தை சுவாரசியமாக விவரித்துள்ளார். வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.