நடிகை வரலட்சுமிக்கு என்ஐஏ சம்மன்!!

 
'Am I Joining my father's party?' Varalakshmi Sarathkumar opens up!

போதை பொருள் கடத்தல் வழக்கில் நடிகை வரலட்சுமிக்கு என்ஐஏ சம்மன் அனுப்பியுள்ளது.

NIA

கேரளாவின் விழிஞ்சம் கடல் பகுதியில் சிறிய படத்தின் மூலம் கடந்த  2021 ஆம் ஆண்டு 327 கிலோ ஹெராயின் 5 ஏகே 47 துப்பாக்கிகள் மற்றும் ஆயிரத் தோட்டாக்கள் கடலோர பாதுகாப்பு படையினரால்  பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சென்னை,  திருவள்ளூர் உட்பட்ட தமிழகத்தின் பல இடங்களில் சோதனை நடத்தினர். இந்த வழக்கில் ஆதி லிங்கம் என்பவரை சென்னையில் வைத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.  கைது செய்யப்பட்ட ஆதி லிங்கம் ஏற்கனவே சென்னையில் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர் குணசேகரனின் கூட்டாளி என்பது விசாரணையில் தெரியவந்தது.

varalakshmi sarathkumar

இந்நிலையில் கேரளாவின் விழிஞ்சம் கடற்கரைப் பகுதியில் 300 கிலோ ஹெராயின் மற்றும் ஏகே 47 பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆதிலிங்கம், நடிகை வரலட்சுமி உதவியாளராக  இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அத்துடன் போதை பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை திரைத்துறையில் ஆதிலிங்கம் முதலீடு செய்ததாகவும் தேசிய  புலனாய்வு முகமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இதன் காரணமாக நடிகை வரலட்சுமிக்கு தேசிய புலனாய்வு முகமை சம்மன் அனுப்பியுள்ளது. என்ஐஏ  அதிகாரிகள் நடிகை வரலட்சுமியை விசாரிக்க அழைப்பு விடுத்த நிலையில், ஆந்திராவில் படப்பிடிப்பில் இருப்பதாக விளக்கமளித்துள்ளார்.