"போலி வாக்காளர்களை வைத்துதான் கொளத்தூரில் வெற்றி பெற்றீர்களா?"- நிர்மலா சீதாராமன்

 
Nirmala sitharaman mkstalin Nirmala sitharaman mkstalin

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு SIR என்றால் என்னவென்றே தெரியவில்லை   என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “கூட்டணிக் கட்சி விவகாரங்களில் எப்போதும் பிஜேபி தலையிடாது. கொளத்தூர் தொகுதியில் 4,379 போலி வாக்காளர்கள் உள்ளனர். போலி வாக்காளர்களை வைத்துதான் கொளத்தூரில் வெற்றி பெற்றீர்களா? துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு SIR என்றால் என்னவென்றே தெரியவில்லை. Special intensive revision-க்கு பதிலாக Special intensive restriction என்று கூறுகிறார். Revision ஐ Restriction எனக் கூறும் துணை முதல்வர் இதை என்னவென்று புரிந்துகொண்டு பேசுகிறார். எதற்காக போராட்டம் என்றும் புரியவில்லை. வழக்கமாக நடக்கும் SIR  வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து திமுக நடத்தும் நாடக அரசியல் அவர்களது வன்மத்தை மட்டுமே வெளிப்படுத்துகிறது. எஸ்.ஐ.ஆர் மூலமாக யாருக்கும் வாக்குரிமை போகாது. உயிரிழந்தவர்கள், ஊரை விட்டு சென்றவர்களின் பெயர்களை எல்லாம் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க கூடாது என்கிறார்களா? எஸ்.ஐ.ஆர்க்கு எதிராக திமுக ஏன் போராடுகிறது என்றே தெரியவில்லை.