நித்தியானந்தா எங்கு உள்ளார்? கைலாசா எங்கு உள்ளது? அங்கு எப்படி செல்வது?- நீதிபதிகளின் கேள்விக்கு சீடர் பதில்
மதுரை ஆதீன மடத்திற்குள் நுழைய அனுமதி கோரி நித்தியானந்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பினார்.

திருவண்ணாமலை நித்யானந்த பீடத்தை சேர்ந்த நித்தியானந்தா என்ற ராஜசேகர் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மேல்முறையீட்டு மனு 2018 ஆம் ஆண்டு தாக்கல் செய் திருந்தார். அதில், நான் பக்தராக ஆதினம் மடத்திற்குள் நுழைய தடைவிதிக்க கூடாது. நான் ஆவின மடத்திற்குள் நுழைய ஏற்கனவே தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என மேல்முறையீட்டு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை ஏற்கனவே விசாரணை செய்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தனி நீதிபதி உத்தரவிற்கு இடைக்கால தடைவிதித்து வழக்கு விசாரணை ஒத்தி வைத்திருந்தனர். இந்த வழக்கு பல வருடங்களாக நிலுவையில் இருந்தது.
இந்த நிலையில் இந்த மனு நீதிபதிகள் S.M.சுப்பிரமணியம், மரியா கிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின் போது நித்தியானந்தா தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகாததால் அவரது சீடர் அரச்சனா என்பவர் ஆஜராகி இருந்தார். அப்போது நீதிபதிகள் மனுதாரர் எங்கு உள்ளார். ? கைலாசா எங்கு உள்ளது?. அங்கு எப்படி செல்வது.? நீங்கள் சென்று உள்ளீர்களா?பாஸ்போர்ட், விசா உள்ளிட்டவை உண்டா? என பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அப்பொழுது நி்த்தியின் சீடர், நித்தியானந்தா ஆஸ்திரேலியா அருகில் உள்ள USK (யுனைட்டட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாசா) என்ற தனி நாட்டில் உள்ளார். அதற்கு ஐநா சபையில் அங்கீகாரம் உள்ளது. எங்கள் சார்பில் புதிய வழக்கறிஞரை நியமிக்க அனுமதிக்க வேண்டும் என கூறினார். இதை தொடர்ந்து, நீதிபதிகள், வழக்கறிஞர் மாற்றுவதற்கு அனுமதி வழங்கி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.


