"நெய்வேலியில் இருந்து என்எல்சி வெளியேற வேண்டும்" - அன்புமணி ராமதாஸ் பேட்டி

 
tn

நெய்வேலியில் என்எல்சி  விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

என்எல்சி போராட்டத்தில் பங்கேற்று பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாமகவினரை அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று நேரில் சந்தித்தார் இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்,  என்எல்சிக்கு எதிரான போராட்டத்தில் 55 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கடுமையான சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். யாரும் எந்த தவறும் செய்யாதவர்கள்.

tn

 நெய்வேலியில் இருந்து என்எல்சி வெளியேற வேண்டும். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும்.  நெய்வேலியில் மூன்றாவது சுரங்கம் தொடங்க அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. விவசாயிகளின் நண்பன் என்று சொல்ல திமுக அரசுக்கு தகுதி கிடையாது. ; இது என்எல்சிக்கு எதிரான போராட்டம் அல்ல;

Anbumani Ramadoss

இது மண்ணுக்கான போராட்டம். விளைநிலங்களை காக்கவே நெய்வேலியில் போராட்டம் நடைபெற்று நடைபெற்றது. தமிழக அரசு விவசாயிகள் பக்கம் நிற்காமல் கார்ப்பரேட் பக்கம் நிற்கிறது. மூன்றாவது நிலக்கரி சுரங்கம் அமைக்கப்படும் என மத்திய அரசு கூறியதை முதல்வர் ஏன் எதிர்க்கவில்லை? மூன்று இடங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க 78 கோடி ஒதுக்கிய  நிலையில் அரசு மௌனம்  கலைக்க வேண்டும். என்றார்.