சட்டப்பேரவையில் ஓபிஎஸ் இருக்கையில் மாற்றமில்லை!

 
tn

சட்டப்பேரவை இன்று கூடியுள்ள நிலையில்  ஓ.பன்னீர்செல்வம் இருக்கையில் மாற்றமில்லை. 

govt

தமிழக சட்டபேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று  கூடியது. தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு மத்திய அரசு வலியுறுத்தி அரசின் தனி தீர்மானத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கொண்டு வருகிறார். மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னதாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எஸ்.பி வேலுமணி, கே.பி. முனுசாமி, ஆர்.பி உதயகுமார் உள்ளிட்டோர் சபாநாயகர் அப்பாவு உடன் சந்திப்பு நிகழ்த்தினர். சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம் குறித்து மீண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

tn

இந்நிலையில் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி. உதயகுமாருக்கு வழங்க வேண்டும் என்ற அதிமுக எம்எல்ஏக்கள் சபாநாயகர் அப்பாவை சந்தித்து கோரிக்கை வைத்த நிலையில்,  எந்த மாற்றமும் செய்யப்படவில்லை அந்த இருக்கையில் தற்போது அமர்ந்துள்ளார்.