தமிழ் மீது இந்தி உள்ளிட்ட எந்த மொழியையும் திணிக்க முடியாது - ஆளுநர் ஆர்.என்.ரவி..

 
ravi


தமிழ் மொழி மிகவும் பழமையானது என்றும்,  அதன் மீது இந்தி உள்ளிட்ட வேறு எந்த மொழியையும் திணிக்க முடியாது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.  

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிலும் மாணவர்கள் மத்தியில் தமிழக ஆளுநர்  ஆர்.என்.ரவி இன்று கலந்துரையாடினார். சென்னை  கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்  மாணவர்களுடன் உரையாற்றிய ஆளுநர்  ஆர்.என்.ரவி பேசியதாவது, “இந்தி  மொழியைவிட தமிழ் மொழி மிகவும் பழமை வாய்ந்தது. சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழி. தமிழ் மீது இந்தி உள்பட எந்த மொழியையும் திணிக்க முடியாது.” என்று கூறினார்.

தமிழ் மீது இந்தி உள்ளிட்ட எந்த மொழியையும் திணிக்க முடியாது  - ஆளுநர் ஆர்.என்.ரவி..

மேலும், திருக்குறள் மனித சமூகத்திற்கு தேவையான அனைத்து கருத்துகளையும்  வழங்கும் நூல்; திருக்குறளை ஆழமாக பயில வேண்டும். திருக்குறள் போல் தமிழில் பல இலக்கியங்கள் உள்ளன. பிறமொழி பேசுபவர்கள் தமிழ் மொழி  மற்றும் தமிழ் இலக்கியத்தை கற்றுக்கொள்ள நினைப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.” என்று தெரிவித்தார்.