பிரதமரை வீட்டுக்கு அனுப்பும் வரை தூக்கமில்லை: அமைச்சர் உதயநிதி
மக்களவை தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதன் காரணமாக அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை மறுநாள் வாக்குப்பதிவு என்பதால் இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது.
இந்நிலையில் தேர்தல் பரப்புரைக்கான இறுதி நாளில் கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீவிர பரப்புரை செய்து வருகிறார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்பும் வரையில் தூக்கமில்லை; மானமிகு சுயமரியாதைக்காரர்கள், இரக்கமற்ற சர்வாதிகாரிகளுக்கு இடையே நடக்கும் போர். ஒருவேளை திருவள்ளுவர் இருந்து மோடி சொல்லும் திருக்குறளை எல்லாம் கேட்டிருந்தால் என்ன ஆவது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் , I.N.D.I.A. கூட்டணி இந்த முறை மத்தியில் ஆட்சி அமைக்க போகிறது; அதற்கான ஆரம்பப் புள்ளியாக கோவை மக்களவைத் தொகுதி இருக்க போகிறது என்றார்.