9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

 
ttn

9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

rain
கடந்த 9ஆம் தேதி  காலை தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன்தினம்  மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வலுப்பெற்று,  வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று  காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே பகுதியில் நிலைகொண்டது.  இந்த சூழலில்  வங்கக்கடலில் உருவானது மோக்கா (Mocha) புயல் இன்று இரவு தீவிர புயலாகவும், நாளை மிகத்தீவிர புயலாகவும் வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து வரும்14ம் தேதி காலை வங்கதேசம் - மியான்மர் இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 

rain

இந்நிலையில் வங்கக்கடலில் 'மோக்கா புயல்' உருவானதை குறிக்கும் வகையில், சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.