கிராண்ட் மாஸ்டர் வைஷாலிக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து
கிராண்ட் மாஸ்டர் வைஷாலிக்கு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 84வது கிராண்ட் மாஸ்டரானார் தமிழ்நாடு செஸ் வீராங்கனை வைஷாலி. கிளாசிக் செஸ் போட்டியில் 2500 ELO புள்ளிகளை பெற்று 84வது கிராண்ட் மாஸ்டர் ஆகியுள்ளார் வைஷாலி. இதன்மூலம் தமிழ்நாட்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறும் முதல் வீராங்கனை என்ற பெருமையையும், இந்தியளவில் 3வது வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
தமிழ்நாட்டிலிருந்து கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறும் முதல் சதுரங்க வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ள செல்வி வைஷாலி @chessvaishali அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.
— O Panneerselvam (@OfficeOfOPS) December 2, 2023
அவர் மேலும் பல உயரிய விருதுகளை பெற எனது நல்வாழ்த்துகள். pic.twitter.com/blhRxZ2C3I
இந்த நிலையில், கிராண்ட் மாஸ்டர் வைஷாலிக்கு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டிலிருந்து கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறும் முதல் சதுரங்க வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ள செல்வி வைஷாலி @chessvaishali அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். அவர் மேலும் பல உயரிய விருதுகளை பெற எனது நல்வாழ்த்துகள். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.