ஓபிஎஸ்-ஐ பாஜக கை கழுவியது உண்மை தான்...இனிமேல் தான் ஆட்டம் ஆரம்பம் - புகழேந்தி பேட்டி

 
Pugazhendhi

ஓ.பன்னீர்செல்வத்தை பா.ஜ.க. தலைவர்கள் முழுமையாக கை கழுவி விட்டார்கள் என்பது உண்மை தான் எனவும், இனிமேல் தான் ஓ.பன்னீர்செல்வத்தின் அடுத்தகட்ட ஆட்டம் தொடங்கும் எனவும் அவரது ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார். 

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். தாயாரின் மறைவையொட்டி ஓ.பன்னீர்செல்வத்திற்கு பல்வேறு தலைவர்களும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி மற்றும் புகழேந்தி ஆகியோர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு சென்று தாயார் பழனியம்மாள் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 

Ops

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி கூறியதாவது: ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் யாரும் வரவில்லை. இது அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்கட்சியினர் கூட இரங்கல் தெரிவித்து நேரில் அஞ்சலி செலுத்தி சென்றனர். இவர்களின் தற்போதைய நடவடிக்கை ஒரு நிரந்தர பிரிவை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அ.தி.மு.க.வில் பிளவு என்பது உறுதியாகி விட்டது.  ஓ.பன்னீர்செல்வத்தை பா.ஜ.க. தலைவர்கள் முழுமையாக கை கழுவி விட்டார்கள். இனிமேல் அவர்களை நம்பி எந்த பயனும் இல்லை என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியிருப்பது முற்றிலும் உண்மை. பண்ருட்டியார் கூறியது போல தமிழக அரசியலில் நிறைய மாற்றங்கள் விரைவில் ஏற்படப்போகிறது. ஓ.பி.எஸ்.சின் அடுத்தகட்ட ஆட்டம் இனிமேல்தான் நடக்கும். இவ்வாறு கூறினார்