பெட்ரோல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு..

 
பெட்ரோல், டீசல்

பெட்ரோல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில்  எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன.  இந்த நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும் ஓராண்டுக்கும் மேலாக இந்தியாவில் பெட்ரோல்,  டீசல் வரை குறைக்கப்படவில்லை. அதன்படி சென்னையில் தொடர்ந்து 383-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி , ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பெட்ரோல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு..

இந்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைப்பினால், பெட்ரோல் விலையை குறைக்க  எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து விட்டதாலும்,  இழப்பில்  இருந்து மீண்டு விட்டதாலும் விலையை குறைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.