உம்மன் சாண்டி மறைவு - திருமா, ஜவாஹிருல்லா இரங்கல்

 
ttn

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைவையொட்டி திருமாவளவன் , ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

tn

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் , கேரள மேனாள் முதல்வர்  திரு. உம்மன்சாண்டி அவர்கள் பெங்களூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று காலமானார் என்பது அதிர்ச்சியளிக்கிறது.  அவர் நாடறிந்த தலைவர். எளிமையே அவரது முதன்மையான அடையாளம். அவருக்கு எமது வீரவணக்கம். அவரை இழந்து வாடுவோருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.



அதேபோல் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் கேரளாவின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான உம்மன் சாண்டி அவர்கள் உடல் நல குறைவு காரணமாக மறைந்தார் என்ற செய்தியை அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன்.  

tn

இருமுறை கேரள மாநில முதலமைச்சராக பதவி வகித்தவர்.நான்கு முறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். 1970 முதல் 2021 வரை காங்கிரஸ் கட்சி சார்பாக 12 முறை வெற்றி பெற்று தொடர்ந்து 52 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.என்று பதிவிட்டுள்ளார்.