சாலையோர பள்ளத்தால் பறிபோன உயிர் - இருவர் கைது
திருவாரூரில் சாலை பள்ளத்தில் அரசு ஊழியர் விழுந்து பலியான சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவாரூர் அருகே இருசக்கர வாகனத்தில் பயணித்த அரசு ஊழியர் குமார் என்பவர் சாலையோர பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார். சாலை விரிவாக்கத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்த கம்பிகள் குத்தி குமார் உயிரிழந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில் , சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீஸ் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் திருவாரூரில் சாலை விரிவாக்கத்திற்காக தோண்டப்பட்டு இருந்த பள்ளத்தில் தவறி விழுந்து அரசு ஊழியர் குமார் உயிரிழந்த சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஜாக்கிரதையாக பணிகளை மேற்கொண்டதாக கூறி ஒப்பந்த நிறுவனம் மேலாளர் மற்றும் கண்காணிப்பாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.