மே 16-ஆம் தேதி முதல் உதகை மலர் கண்காட்சி தொடக்கம்

 
flower exibition flower exibition

உதகையில் இந்த ஆண்டு கோடை விழா மே 3-ந்தேதி தொடங்குகிறது. பிரசித்தி பெற்ற 127-வது மலர் கண்காட்சி மே 16-ந்தேதி தொடங்கி 6 நாட்கள் நடைபெறும் என மாவட்ட ஆட்சிதலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்.

ooty

நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே ஆகிய 2 மாதங்கள் கோடை சீசன் காலமாகும். அப்போது இதமான காலநிலையில் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். அவர் வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பாக கோடை விழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டிற்கான கோடை விழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் உதகையில் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்ய தண்ணீரு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கோடை விழா நிகழ்ச்சிகள் நடத்துவது அதற்கான ஏற்பாடுகளை செய்வது குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் பிரசித்தி பெற்ற மலர் கண்காட்சி உள்ளிட்ட முக்கிய கண்காட்சிகள் நடத்துவதற்கான செய்திகளும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவிய தண்ணீரு:  நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா மே 3-ந்தேதி தொடங்குவதாகவும் முதல் நிகழ்ச்சியாக மே 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் கோத்தகிரி நேரு பூங்காவில் 13-வது காய்கறி கண்காட்சி நடைபெறும் என்றார்.

 

அதனை தொடர்ந்து மே 9-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை 3 நாட்கள் கூடலூரில் 11-வது வாசனை திரவிய காட்சியும் உதகை அரசு ரோஜா பூங்காவில் மே 10, 11, 12 ஆகிய 3 நாட்கள் 20-வது ராஜா கண்காட்சி நடைபெறும் என்றார். அதனை தொடர்ந்து உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சி  மே 16 முதல் 21 வரை 6 நாட்கள் நடைபெறும் என்றும் மே 23-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை 3 நாட்களுக்கு குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 65-வது பழக்கண்காட்சி நடைபெறும் என்றார். மேலும் முதல் முறையாக குன்னூர் அருகே உள்ள காட்டேரி பூங்காவில் முதலாவது மலைப்பயிர்கள் கண்காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதன்படி மே 30 31 மற்றும் ஜூன் ஒன்றாம் தேதி ஆகிய மூன்று நாட்கள் காட்டிரி பூங்காவில் மழை பயிர்கள் கண்காட்சி நடைபெறும் என்றும் தெரிவித்தார்.