பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் - வரும் 8ஆம் தேதி அமைச்சர் ஆலோசனை

 
Sivasankar

பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடர்பாக வரும் 8ம் தேதி போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனை மேற்கொள்கிறார்.

BUSபொங்கல் பண்டிகை என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் அறுவடைப் பண்டிகை ஆகும். பொங்கல் பண்டிகையானது 3 நாட்கள் கொண்டாடப்படும். இதன் காரணமாக மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். 

bus

இந்நிலையில் பொங்கலுக்கு சிறப்பு பேருந்தில் இயக்குவது தொடர்பாக ஜனவரி 8-இல் அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை மேற்கொள்கிறார். ஜன.15 முதல் 3 நாட்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஆலோசனை நடைபெற உள்ளது . சிறப்பு பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கலாமா என ஆலோசிக்க உள்ளனர். அன்றைய தினமே சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடர்பான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.