பாஜகவுடன் கூட்டணி வைக்க தேமுதிகவினர் எதிர்ப்பு!
Feb 17, 2024, 12:46 IST1708154209674
சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் கடந்த 7ஆம் தேதி தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து நிர்வாகிகளிடம் பிரேமலதா விஜயகாந்த் கருத்து கேட்டதாக தெரிகிறது.
தேமுதிக இதுவரைக்கும் எந்த கட்சியுடனும் கூட்டணி குறித்து மறைமுகமாகவோ, அதிகாரப்பூர்வமாகவோ பேசவில்லை. ஊடகங்களில் வரும் செய்திகள் யூகமாகவே கருதப்படுகிறது. மாவட்ட கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டு கூட்டணி பேச குழு அமைத்திடவும், கூட்டணி குறித்து இறுதி முடிவெடுக்கும் முழு அதிகாரத்தை பிரேமலதாவிற்கு வழங்கி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் பாஜகவுடன் தேமுதிக கூட்டணி வைக்கக் கூடாது என அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் எனவும் பொதுச்செயலாளர் பிரேமலதாவிடம் வலியுறுத்தியுள்ளனர். சீட் விவகாரத்தில் பிடிவாதம் காட்டாமல் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் எனவும் மாவட்டச் செயலாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.