அண்ணாமலை பிறந்தநாள் - ஓபிஎஸ், ஈபிஎஸ் வாழ்த்து!!

 
tn

பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ்  இருவரும் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளனர். 

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை இன்று பாஜகவில் இணைகிறார்!

தமிழகத்தை சேர்ந்த அண்ணாமலை கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தவர். கரூர் மாவட்டத்தை சேர்ந்த இவர் 2011 ஆம் ஆண்டு கர்நாடக மாநில பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தா. 2013இல் கட்கலா துணை பிரிவின் எஸ்.பி.யாக தனது காவல்துறை பணியை மேற்கொண்டார். உடுப்பி மற்றும் சிக்கமங்களூரு மாவட்டங்களில் எஸ்பி ஆகவும் இருந்துள்ளார். பின்னர் தெற்கு பகுதியில் துணை போலீஸ் கமிஷனராக இருந்த போது ஒரு கட்டத்தில் தனது ஐபிஎஸ் பதவியை துறந்த அவர் தனது சொந்த ஊருக்கு சென்று கிராமப்புறங்களில் மக்களின் சுய சார்பு பணிகளை மேற்கொண்டு வந்தார். இதையடுத்து கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி பாஜகவில் இணைந்தார்.பாஜகவில் இணைந்த அண்ணாமலைக்கு தமிழக பாஜக தலைவர் பதவி வழங்கபட்டது. இந்த சூழலில் அண்ணாமலை இன்று தனது 38ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 



இந்நிலையில் அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர், அன்பு சகோதரர் திரு. அண்ணாமலை அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். அவரது சமூக பணி சிறக்க வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார். 


அதேபோல் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், "இன்று பிறந்தநாள் விழா காணும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் அன்புச்சகோதரர் அண்ணாமலை அவர்களுக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். திரு.அண்ணாமலை அவர்கள் அனைத்து நலன்களையும், வளங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்! " என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.