"லஞ்ச ஒழிப்புத்துறை பச்சோந்தி போல செயல்படுகிறது" - நீதிமன்றம் கண்டனம்!!

 
tn

ஓபிஸ் சொத்து வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ops சென்னை உயர்நீதிமன்றம் ஓபிஎஸ் மீது தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.  2001 - 2006 ஆம் வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சுமார் 1.72 கோடி சொத்து சேர்த்ததாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மீது 2006 திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.  இந்த வழக்கை விசாரித்த சிவகங்கை நீதிமன்றம் 2012 ஆம் ஆண்டு பன்னீர்செல்வத்தை விடுதலை செய்தது.  இந்த சூழலில்  முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வத்திற்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரணை நடத்தியது.

tn

இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ஆட்சிக்கு ஏற்றார் போல் தன்னை மாற்றி பச்சோந்தியாக மாறிவிட்டது.  லஞ்ச ஒழிப்புத்துறை இதேபோல வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட உத்தரவுகள் அனைத்தும் மறு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.