முன்னாள் எம்எல்ஏ நன்மாறன் மறைவு - ஓபிஎஸ் இரங்கல்!!

 
ttn

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என். நன்மாறன் மறைவுக்கு  முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  இரங்கல் தெரிவித்துள்ளார். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நன்மாறன் உடல்நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார் . மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 4மணியளவில் காலமானார். அவருக்கு வயது 74 . மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நன்மாறன் மறைவிற்கு  முதல்வர் மு.க .ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

image

இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் விடுத்துள்ள இரங்கல் குறிப்பில், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும்,  சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் , இலக்கிய ஆற்றல் படைத்தவரும் ,10 ஆண்டுகாலம் சட்டமன்றத்தில் என்னிடம் நெருங்கி பழகிய வருமான நன்மாறன் அவர்கள் மூச்சுத்திணறல் காரணமாக மதுரை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ,சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து, ஆற்றொணாத் துயரமும் மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.



மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இருந்து 2001 மற்றும் 2006ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தேர்தல் எடுக்கப்பட்டு ,மக்களின் கோரிக்கைகளை சட்டமன்றத்தில் ஆணித்தரமாக ,அதே சமயத்தில் அமைதியான முறையில் எடுத்துரைத்தவர் நன்மாறன் அவர்கள் . அமைதியின் மறு உருவமாக , எளிமையின்  சிகரமாகவும் ,மனிதநேய மிக்கவராகவும் விளங்கிய நன்மாறன் அவர்கள் ,ஏழை எளிய மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்றதோடு மட்டுமல்லாமல் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களின் நன்மதிப்பையும் பெற்றவர்.

பொது மக்களுக்காக குறிப்பாக ஏழை, எளிய அதில் அடித்தட்டு மக்களுக்காக,  தன் வாழ்நாளையே அர்ப்பணித்த மாமனிதர் நன்மாறன் அவர்களின் உயிரிழப்பு, தமிழ்நாட்டு மக்களுக்கு பேரிழப்பு ஆகும் . அவருடைய இடத்தை இனி வேறு யாராலும் நிரப்ப முடியாது நன்மாறன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.